மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் உதயகுமார் சிறப்பு வழிபாடு

மதுரை; அதிமுக, பாஜக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, மதுரை எஸ்.எஸ். காலனி காஞ்சி பெரியவர் கோவிலில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பாஜகவுடன் சேர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். இந்த கூட்டணி அமைந்தால் வலுவான இடங்களில் வெற்றி பெறலாம் என்பதையும் அவர் தொடர்ச்சியாக சொல்லி வந்தார். இந்த நிலையில் அமித்ஷா தமிழ்நாடு வந்தபோது, கூட்டணி உறுதி ஆனது.
தமிழ் புத்தாண்டு தினமான நேற்று இரவில், சட்டசபை கூட்டத்திற்கு கிளம்பும் முன்பாக, மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோயிலுக்கு சென்றார்.
அங்கு , காஞ்சிப் பெரியவருக்கு தானே தீபாராதனை செய்து, பூஜைகள் செய்து வணங்கினார். பயபக்தியோடு அங்கு வேண்டிக் கொண்டார்.
அதிமுக கூட்டணி வெற்றிபெற
வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வழிபட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, அவரை வரவேற்று, பிரசாதங்கள் வழங்கினார்.
மேலும்
-
நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்; மருத்துவமனையில் பதற்றம்
-
தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!