பொது இடத்தில் தகராறு வாலிபர் கைது

புதுச்சேரி, : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருவள்ளூ வர் மாவட்டம், பூந்த மல்லியைச் சேர்ந்த அபுதகீர் 32, என்பவர், பிப்டிக் சாலையில் நின்று கொண்டு பொது இடத்தில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல் முதலியார்பேட்டை நுாறு அடி சாலையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 41, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement