'பிரிவினைவாதத்தை துாண்டுகிறார் முதல்வர்': நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை : “தனித் தமிழ்நாடு, தனிக்கொடி வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். பிரிவினைவாதத்தை துாண்டுகிறார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலங்களை பிரிக்க வேண்டும் என, பிரிவினைவாதத்தை முதல்வர் துாண்டுகிறார். இந்திய நாடு வல்லரசாக வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. தனித் தமிழ்நாடு வேண்டும்; தனிக்கொடி வேண்டும் என, முதல்வர் நினைக்கிறார்.
அதனாலேயே சட்டசபையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது போல, பிரிவினை வாதத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதை பா.ஜ., கண்டிக்கிறது.
இந்தியா வல்லரசாக, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்திய நாடு நிர்வாக வசதிக்காக, பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, ஏதேனும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., நினைக்கிறது.
இது மக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான செயல். மக்கள் இதை சிந்தித்து, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். பெண்களை அவதுாறாக, அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுகுறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
















மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
-
முதியவர் மீது 'போக்சோ'