காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி
காரைக்கால் : காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் உயிரிழந்தார்.
காரைக்கால், சின்ன கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 65; இவர், நேற்று காலை டீக்கடைக்கு செல்ல பாரதியார் சாலை நித்தீஸ்வரன் கோவில் அருகில் நடந்து சென்ற போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் செல்வராஜ் மீது மோதியது.
இதில் முன் சக்கரம் சிக்கி, செல்வராஜ் அதே இடத்தில் இறந்தார்.
தகவலறிந்த நகர போக்குவரத்து போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் கிரேன் டிரைவர் மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்ராஜ், 24 , என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
-
பொன்முடி மீது வழக்கு பதிய கடலுார், கள்ளக்குறிச்சியில் புகார்
-
முதியவர் மீது 'போக்சோ'
Advertisement
Advertisement