போலி ஆவண மோசடி ஒருவர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே போலி ஆவண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் சுப்பிரமணியன்,60; விவசாயி. இவர் அதே கிராமத்தில், 15 சென்ட் பரப்பு கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்திற்கு, கடந்த, 2015,ல் போலி ஆவணங்களை தயார் செய்தார்.
அதைக்கொண்டு, தம்பி முனியன் மகன் ஏழுமலை என்பவரிடம், அந்த இடத்தை விற்பனை செய்தார். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் விஜயன் புகார் அளித்தார். வடபொன்பரப்பி போலீசார், சுப்ரமணியனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; சுப்ரீம்கோர்ட் விசாரணை துவக்கம்
-
வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி
-
'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Advertisement
Advertisement