மானாமதுரை வாரச்சந்தையில் திருட்டு

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. மதுரை, சிவகங்கை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பரமக்குடி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.

மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக வாரச்சந்தைக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவி மாலை 6:00 மணிக்கு மேல் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பொருட்களை வாங்குவது போன்று வந்து பணம் மற்றும் அலைபேசியை திருடி வருகின்றனர்.

போலீசார் வாரச்சந்தையன்று ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement