ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை; ஏழை, எளிய மக்களுக்கு சிக்கல்

கோவை; தங்க நகைக் கடன் விவகாரத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறையை மாற்ற வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்கள், தங்களின் அவசர தேவைகளுக்கு நம்பியிருப்பது, தங்க நகைக் கடன் தான். இந்நிலையில், கடந்த மாதம் ரிசர்வ் வங்கி பிறப்பித்த புதிய விதி, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நகைக் கடன் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆண்டும், காலக்கெடு முடியும் போது, வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்த வேண்டும்; அதற்கு அடுத்த நாளில் தான், நகையை மறு அடகு வைக்க முடியும் என்பது, ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய விதி.இந்த புதிய விதியால், நகைக்கடனுக்கான அசலை கட்ட, கடன் வாங்கும் நிலை ஏற்படும் என மக்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement