விடுதியில் வீடற்றோர் தங்கவைக்க மாநகராட்சி நடவடிக்கை தேவை

அனுப்பர்பாளையம்; திருப்பூரில் வீடற்றோர் அதிகளவில் உள்ளனர். இவர்கள் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரம், கடை வீதி, கோவில் முன்பு உள்ளிட்ட இடங்களில் தங்கி வருகின்றனர்.
ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்ளுதல், குடிபோதையில் தகராறு செய்தல், பஸ் ஸ்டாண்டில் தங்குபவர்களால் பயணிகளுக்கு இடையூறு, ரோட்டில் தங்குபவர்களால் விபத்து உள்ளிட்டவை அடிக்கடி நடக்கிறது. வீடற்ற ஏழைகள் தங்குவதற்கு மாநகராட்சி சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம், பி.என்., ரோட்டில் குமரன் பூங்கா அருகில், ஆலாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீடற்ற ஏழைகள் தங்கும் அறை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரம், உள்ளிட்ட ஆங்காங்கே தங்கும் வீடற்ற ஏழைகளை மாநகராட்சி தங்கும் விடுதியில் தங்க வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement