மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.3.26 கோடி காணிக்கை வசூல்

சாம்ராஜ் நகர்: மலை மஹாதேஸ்வர சுவாமி கோவில் உண்டியலில், 35 நாட்களில் 3.26 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் மலை மஹாதேஸ்வரா மலைக்கோவில் அமைந்துள்ளது. அதிக வருவாய் கொண்ட கர்நாடகாவின் கோவில்களில், இதுவும் ஒன்றாகும். மாதந்தோறும் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். 35 நாட்களுக்கு முன், உண்டியல் எண்ணப்பட்டது.
தொடர் விடுமுறைகள், யுகாதி பண்டிகை இருந்ததால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் உண்டியல் நிரம்பியது. நேற்று முன்தினம் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. இரவு 10:00 மணி வரை எண்ணும் பணி நடந்தது.
உண்டியலில் 3 கோடியே 26 லட்சத்து 95,339 ரூபாய் ரொக்கம்; 47 கிராம் தங்கம், 2.200 கிலோ வெள்ளி பொருட்கள்; 11 வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்*
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement