மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு
கடலுார்: கடலுார், வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் இளமாறன். இவர், தனது தம்பி இளஞ்செழியன் என்பவரின் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2013ம் ஆண்டு கடலுார், புதுப்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
மின் இணைப்பு வழங்க, மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்த முனுசாமி,56; என்பவர் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து இளமாறன், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
தொடர்ந்து, லஞ்சம் வாங்கிய முனுசாமியை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
வழக்கு விசாரணை முடிந்து, கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். இதில், முனுசாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 15ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்*
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement