போக்சோ குற்றங்கள்

நர்சிங் மாணவியை கடத்த முயற்சி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பேண்ட் வாசிக்கும் தொழிலாளி யோகேஷ், 19. ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது நர்சிங் மாணவியை இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி வந்தார். யோகேஷின் நடவடிக்கை பிடிக்காத மாணவி, காதலிக்க மறுத்து அவரிடம் பேசாமல் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை, யாருமில்லாத நேரத்தில் மாணவி வீட்டிற்கு சென்ற யோகேஷ், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, மாணவியை கடத்த முயன்றார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார்.

அக்கம்பக்கத்தினர் யோகேஷை தட்டி கேட்டனர். ஆத்திரமடைந்த யோகேஷ், அங்கிருந்தவர்களை ஆபாசமாக பேசி மிரட்டினார். ஆரணி மகளிர் போலீசார், யோகேஷை போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement