ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் எல்லையில் 86 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நண்பகல் 12.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கம் எதிரொலியாக கட்டங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சம் அடைந்து கட்டடங்களை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏதேனும் பொருட்செலவு, உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், டில்லி உள்ளிட்ட பல வட மாநில பகுதிகளிலும் உணரப்பட்டது.
பாகிஸ்தானில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் என பல நகரங்களும் குலுங்கின.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புட்லுார் கோவில் குளத்தில் கரை அமைக்க கோரிக்கை
-
கால்வாயில் விழுந்தவர் பலி
-
7 வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார் நால்வர் காயம்; போதை ஓட்டுநருக்கு 'காப்பு'
-
சென்னிமலை மலை கோவில் பாதையில்இரவோடு இரவாக 'டோல்கேட்' மாற்றம்
-
சத்தி, பங்களாப்புதுாரில்இன்ஸ்பெக்டர் இல்லைபணிகள் மந்தம் என புகார்
-
3 யூனியன்களில் ரூ.11.82 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
Advertisement
Advertisement