கால்வாயில் விழுந்தவர் பலி

திருவாலங்காடு,
திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சி காட்ராயகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன், 45; கட்டட மேஸ்திரி. இவர், கடந்த 11ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு, இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த மாதவன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு, நேற்று உயிரிழந்தார்.

Advertisement