பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை துவங்குகிறது.

முதன்மை பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை (21ம் தேதி) முதல் 24ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க், பத்துக்கண்ணு ஜங்ஷன், கரியமாணிக்கம், வில்லியனுார், திருக்கனுார், கனகசெட்டிக்குளம், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், தவளக்குப்பம், மதகடிப்பட்டு மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு மேளாவில் ரூ.148 மதிப்புள்ள சிம்கார்டு ரூ. 50 மட்டுமே. இந்த சிம்காட்டில் 28 நாட்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். ரூ.289 மதிப்புள்ள சிம் கார்டு ரூ.100 மட்டுமே. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எஸ். நெட்வொர்க் வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.108 ரீசார்ஜ்வுடன் சிம் இலவசம்.

வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். புதுச்சேரி முழுதும் இன்று வரை 50க்கும் மேற்பட்ட புதிய 4ஜி கோபுரங்கள் நிறுவனப்பட்டுள்ளது.

புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement