சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றங்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும், நீதி நிர்வாகத்தின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக கடந்த ஏப்.,15 மற்றும் 19ம் தேதிகளில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பின் ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த 4 நீதிபதிகள் உள்பட 7 பேரை பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது.
அதன்படி, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஹேமந்த் சந்தன் கவுடர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதி கிருஷ்ணன் நடராஜன் கேரள உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதிநேரனஹள்ளி ஸ்ரீனிவாசன் சஞ்சய் கவுடா குஜராத் உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதி தீக்ஷித் கிருஷ்ணா ஸ்ரீபட், ஒடிசா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி பெருகு ஸ்ரீ சதா, கர்நாடகாவுக்கும், மற்றொரு நீதிபதி சுரேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், ஆந்திர உயர்நீதிமன்றத்தின் கும்பஜடல மன்மத ராவ், கர்நாடகாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும்
-
தமிழக காங். எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை: அதிகாரிகளை தாக்கிய வழக்கில் தீர்ப்பு
-
எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது: பிரதமர் மோடி பேச்சு
-
விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை
-
மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா
-
மின்வாரிய ஊழியர்கள் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்காதது ஏன்; அண்ணாமலை கேள்வி
-
புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு: மத்திய அரசு அறிவுறுத்தல்