புழக்கத்தில் உள்ள புது வகை ரூ.500 கள்ள நோட்டு: மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடில்லி: புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ''வங்கிகள், செபி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது.
* "RESERVE" என்ற சொல்லில் "E" தவறாக "A" என அச்சிடப்பட்டுள்ளது.
* உண்மையான நோட்டை போலவே மிகத் துல்லியமாக புதிய வகை ரூ.500 கள்ள நோட்டு அச்சிடப்பட்டு உள்ளது.
* வங்கிகள், செபி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., உள்ளிட்ட அமைப்புகள் இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ., போன்ற அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது







மேலும்
-
10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் போனஸ் மதிப்பெண்
-
நெசவாளர் உதவித்தொகை விவகாரம்; தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
தமிழக காங். எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை: அதிகாரிகளை தாக்கிய வழக்கில் தீர்ப்பு
-
எந்த குடிமகனும் பின்தங்கி இருக்க கூடாது: பிரதமர் மோடி பேச்சு
-
விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை
-
மேற்கு வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி: நேரில் மருத்துவமனை சென்ற மம்தா