வாகனங்கள் மோதல் 9 வயது சிறுமி பலி

ராணிப்பேட்டை : வாலாஜா அருகே வாணிச்சத்திரத்தில், லாரி, ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என, நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில், ஆட்டோவில் வந்த 9 வயது சிறுமி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணிச்சத்திரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, வேலுாரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற லாரி, திடீரென பிரேக் அடித்து நின்றது. இதில், பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என அடுத்தடுத்து, நான்கு வாகனங்கள் மோதின.

இதில், ஆட்டோவில் குடும்பத்துடன் பயணித்த, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின், 9 வயது மகள் நிஜிதா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement