தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

திருவாரூர் : போக்சோ வழக்கில், தொழிலாளிக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூர் மகிளா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, தென்குவளவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 45. இவர், சிறுமி ஒருவரிடம், ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி அளித்த புகார்படி, 2020ல் சங்கர் மீது மூன்று பிரிவுகளில், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், சங்கருக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: இலங்கையில் இருவர் கைது
-
ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
-
டில்லியில் பள்ளி இடைநிற்றலுக்கு தீர்வு; மாணவர்கள் வீடுகளுக்கு செல்லும் போலீசார்
-
பார்லிமென்ட்டுக்கே உயரதிகாரம்; துணை ஜனாதிபதி திட்டவட்டம்
-
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கணும்: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு கவுதமி கண்டனம்
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; துவக்குகிறார் துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement