ரூ.5 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர் கைது

மதுரை: மதுரையில் பட்டா ஏற்பாடு செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமராஜ், 35, கைது செய்யப்பட்டார்.
மதுரை வளையங்குளத்தில் சுரேஷ் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வாங்க முயற்சி செய்துள்ளார். அவர் பட்டா ஏற்பாடு செய்து தருமாறு, சர்வேயர் ராமராஜ் என்பவரை அணுகி உள்ளார்.
அவர் பட்டா ஏற்பாடு செய்ய ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத, சுரேஷ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை சர்வேயர் ராமராஜிடம் சுரேஷ் கொடுத்துள்ளார்.
அப்போது, மறைந்து இருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் சர்வேயர் ராமராஜை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (1)
baala - coimbatore,இந்தியா
24 ஏப்,2025 - 15:56 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் முடிவு என்ன?
-
மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: ராகுல்
-
பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு
-
பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: முகேஷ் அம்பானி அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய அசாம் எம்.எல்.ஏ., கைது
-
ஷிம்லா ஒப்பந்தம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement