சாலை விரிவாக்க பணிகள் குறித்து தகவல் பலகை வைக்க கோரிக்கை

சித்தாமூர்:செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து தொன்னாடு, ஒரங்காவலி, நீர்பெயர் போன்ற கிராமங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதுகுறித்த தகவல் பலகை வைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில், செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து தொன்னாடு, ஒரங்காவலி, நீர்பெயர் போன்ற கிராமங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையில் கடந்த மூன்று மாதங்களாக, விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், விரிவாக்கப் பணிகள் குறித்து எந்த இடத்திலும் தகவல் பலகை அமைக்கப்படாமல், பணிகள் நடைபெறுகின்றன.
எந்த திட்டத்தில் பணிகள் நடைபெறுகின்றன, மதிப்பீடு, நீளம், அகலம் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் விபரங்கள் இல்லாமல் உள்ளதால், சாலை விரிவாக்கப் பணிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலைப் பணிகள் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும், அவசியம் தகவல் பலகை அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும்
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம்
-
வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!
-
டில்லி பாக்., துாதரகம் முன் கொந்தளித்த பொதுமக்கள்!
-
சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!