காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!

5


ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று(ஏப்ரல் 25) ஸ்ரீநகர் சென்றடைந்தார்.


காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 25) இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஸ்ரீநகர் சென்றார். அவர் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். அவரிடம் அங்குள்ள ராணுவ உயர் அதிகாரிகள், காஷ்மீரிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.

Advertisement