தொழிலாளி வீட்டில் ரூ. 50 ஆயிரம் திருட்டு
புதுச்சேரி: கூலி தொழிலாளி வீட்டில் 50 ஆயிரம் பணத்தை திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குருமாம்பேட், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமுதா, 51; கூலி தொழிலாளி. இவர் தனது மகன் பார்த்திபன் பராமரிப்பில் இருந்து வருகிறார். குமுதா கூலி வேலைக்கு சென்று, சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தை வீட்டின் அலமாரியில் வைத்திருந்தார்.
கடந்த 22ம் தேதி பார்த்தபோது, 50 ஆயிரத்தை காணவில்லை. அலமாரி முழுதும் தேடியும் கிடைக்காததால் யாரோ பணத்தை திருடியுள்ளது தெரியவந்தது.
குமுதா அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம்
Advertisement
Advertisement