ரூ.100க்கு குறைவாக யு.பி.ஐ.,சேவை இல்லையாம் காஞ்சிபுரத்தில் மீண்டும் சில்லரை பிரச்னை
காஞ்சிபுரம்:மத்திய அரசின் யு.பி.ஐ.,வசதி இப்போது அனைத்து ஸ்மார்ட் போன்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யு.பி.ஐ., வாயிலாக பண பரிவர்த்தனை செய்வது மிக எளிதாக உள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதால், வியாபாரிகளிடையேயும் யு.பி.ஐ., பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனால், கடைகளில், யு.பி.ஐ., வாயிலாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.
மேலும், சில்லறை பிரச்னைக்கும் இது தீர்வாக உள்ளது. பில் தொகையை கடையில் சரியாக செலுத்த முடிகிறது. இவ்வளவு வசதியுள்ள இச்சேவையை, ஒரு சில வியாபாரிகள் தங்களுக்கு ஏற்றாற்போல், வகுத்துக் கொள்கின்றனர்+.
குறைந்தபட்சம், 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால்தான், யு.பி.ஐ., சேவை பயன்படுத்த முடியும் என, தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள பல கடைகளில் குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு மட்டுமே, யு.பி.ஐ., சேவை பயன்படுத்த முடியும் என்கின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கும் இது சிரமத்தை அளிக்கிறது. யு.பி.ஐ., வாயிலாக பண பரிவர்த்தனை எளிதாக மாறிய சூழலில், வியாபாரிகள் சிலர் இதுபோன்ற கட்டுப்பாடுகளை தாங்களே விதிப்பதால், டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பான மத்திய அரசின் நோக்கம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. நுகர்வோருக்கும் சில்லரை பிரச்னை மீண்டும் எழுகிறது.
மேலும்
-
கனடா தேர்தலில் வெற்றி: மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!