மூதாட்டி தற்கொலை

புதுச்சேரி : அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மை, 85. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணமால் போனார். இந்நிலையில் நேற்று காலை முருங்கப்பாக்கம் ஆற்றில் சடலமாக இறந்து கிடந்தார்.

தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சடலத்தை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

வள்ளியம்மை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

நோயின் தன்மை அதிகரிக்கவே மனமுடைந்த வள்ளியம்மை தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Advertisement