பனை மரத்தில் கார் மோதி 3 பேர் காயம்

கமுதி: கமுதி பசும்பொன் அருகே மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள பனைமரத்தின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
பார்த்திபனுாரை சேர்ந்த மாரிச்செல்வம் பத்திரிக்கை வழங்குவதற்கு கமுதி அருகே தோப்படைப்பட்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கமுதி பசும்பொன் அருகே மின்வாரிய அலுவலகம் எதிரே ரோட்டோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் டிரைவர் சதீஷ்குமார் 25, மாரிச்செல்வம் 44, அவரது மனைவி மாரிச்செல்வி 35, பலத்த காயமடைந்தனர். கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
Advertisement
Advertisement