மீன் பிடி தடைக்காலத்தில் தடையை மீறி செயல்படும் படகுகள் மீது நடவடிக்கை
ராமநாதபுரம்: -மீன் பிடி தடைக்காலத்தில் தடையை மீறி செயல்படும் படகுகள் மீது நடவடிக்கை கோரி மீன் வளத்துறை துணை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
பாம்பன் அக்காளமடம் பகுதியை சேர்ந்த செந்துார் கணேஷ் மீன் வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத்திடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் சிறிய அளவிலான நாட்டுப்படகு வைத்து மீன் பிடி தொழில் செய்து வருகிறேன். 2 முதல் 3 நாட்டிகல் மைல் வரை வலை விட்டு மீன் பிடிக்கும் மீனவர்களின் தொழிலை கெடுக்கும் விதமாகவும், இந்திய, இலங்கை மீன் பிடி பிரச்னையை துாண்டி விடும் வகையில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் இயந்திரங்கள் பொருத்தி மீன் பிடித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு சிலர் கெடுத்து வருகின்றனர்.
விதிகளை மீறி மீன் பிடி தொழிலில் ஈடுபடும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
Advertisement
Advertisement