'எழுதிக்கொடுங்கள்' கவுன்சிலர்கள் ஆவேசம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் தலைவர் சுவிதா தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர்கள் பங்கேற்றனர். மேற்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கவுன்சிலர்கள் காவேரி, கருப்பசாமி, முருகன், ரவி, இந்திராகாந்தி, விஜயா, முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வி, லக்சிகா பேசியதாவது:
அனைத்து வார்டுகளிலும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பால் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது என்றால் அதிகாரிகள் எழுதிக் கொடுத்து விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
Advertisement
Advertisement