ஸ்ரீகண்டேஸ்வரா உண்டியல் வசூல் ரூ.2.59 கோடி

மைசூரு: நஞ்சன்கூடின் பிரசித்தி பெற்ற ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில், ஒரே மாதத்தில் 2.59 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
மார்ச் மாதம் யுகாதி, தமிழ் புத்தாண்டு, கோடை விடுமுறை என்பதாலும், கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் ஒரு மாதத்துக்கு பின், உண்டியல் நிரம்பியது. நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன், எண்ணும் பணி நடந்தது. காலை துவங்கிய பணி, நள்ளிரவு வரை நீடித்தது.
உண்டியல்களில் 2.59 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது. அது மட்டுமின்றி 103 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி, 24 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
-
டில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்!
-
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்; மாநில அரசு நடவடிக்கை
-
மதுரை சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம்
-
கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு!
Advertisement
Advertisement