கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு!

ஒட்டாவா: கனடாவில 3 நாட்கள் முன் மாயமான இந்திய மாணவி, கடற்கரையில்சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாபில் உள்ள தேராபாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர் ஆம் ஆத்மி பிரமுகர் தவிந்தர் சைனி என்பவரின் மகள் வன்ஷிகா. வயது 21. இவர் கனடாவில் உள்ள ஒட்டாவா நகரில் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
கடந்த ஏப்.25ம் தேதி முதல் இவர் திடீரென மாயமானார். அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. வாடகைக்கு அறை ஒன்றை காண சென்ற அதன் பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. காணாமல் போன அவரை தீவிரமாக தேடி வருவதாக தூதரகமும் அறிவித்து இருந்தது.
இந் நிலையில் மாணவி வன்ஷிகா உடல் கல்லூரி அருகில் உள்ள கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இது குறித்து உரிய துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, மேலும், மாணவி எப்படி உயிரிழந்தார், கொல்லப்பட்டாரா, உடன் சென்றவர்கள் யார், செல்போன் எங்கே என்ற விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.




மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்