கார் மோதி சிறுவன் பலி

திருப்பூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜீவன்நாயக், 19.காங்கயம் அருகேயுள்ள காடையூரில் தங்கி மில் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

கடந்த வாரம் இவரது தம்பி ஹேமந்த்நாயக், 17. காங்கயம் வந்தார். கோவை - கரூர் ரோட்டில் நடந்து சென்றவர், ரோட்டை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் ேஹமந்த்நாயக் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement