மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

கோவை; தொழிலாளர் தினமான நாளை (மே 1ம் தேதி), கோவையிலுள்ள மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுபானகூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில், செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட, அனைத்து உரிமத்தளங்களும், நாளை மூடப்படுகிறது.

விதிமுறைகளுக்கு முரணாக, அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீதும், மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்பவர்கள் மீதும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்ட நிர்வாகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

Advertisement