தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மார்ச் மாதத்தில் சற்றே உயர்வு

புதுடில்லி: கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது, முந்தைய பிப்ரவரி மாதத்தின் வளர்ச்சியை காட்டிலும் சிறிது அதிகம். பிப்ரவரி வளர்ச்சி முன்பிருந்த 2.90 சதவீதத்திலிருந்து, தற்போது 2.70 சதவீதமாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதத்தின் 5.50 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் வளர்ச்சி சரிந்துள்ளது.
சமீபத்தில் தொழில் துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை வெளியிடுவதற்கான கால வரையறையை, மத்திய அரசு ஆறு வாரங்களில் இருந்து நான்கு வாரங்களாக குறைத்தது. இதன்படி, முதல்முறையாக கடந்த மாதத்துக்கான தரவுகள் நான்கு வாரங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்தாண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மார்ச்சில் தயாரிப்பு, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் வளர்ச்சி கணிசமாக குறைந்துள்ளது.
நிதியாண்டு ஒப்பீட்டில், 2024 - 25ம் நிதியாண்டில் சராசரி தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2023 - 24ம் நிதியாண்டில் 5.90 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2024 மார்ச் 5.50ஏப்ரல் 5.20மே 6.20ஜூன் 4.90ஜூலை 5.00ஆகஸ்ட் 0செப்டம்பர் 3.20அக்டோபர் 3.70நவம்பர் 5.00டிசம்பர் 3.502025ஜனவரி 5.20பிப்ரவரி 2.70மார்ச் 3.00
மேலும்
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை