போபண்ணா ஜோடி ஏமாற்றம்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது.
ஸ்பெயினில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜென்டினாவின் கொன்சாலஸ், மால்டெனி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை போபண்ணா ஜோடி 4-6 என இழந்தது. இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற போபண்ணா ஜோடி, டை பிரேக்கர் வரை சென்று 7-6 என வசப்படுத்தியது.
பின் வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதில் போபண்ணா ஜோடி 9-8 என முன்னிலையில் இருந்தது. கடைசியில் அடுத்தடுத்து புள்ளிகளை இழக்க, 9-11 என நழுவவிட்டது. ஒரு மணி நேரம், 59 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 4-6, 7-6, 9-11 என போராடி தோல்வியடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு
-
ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு
-
மே தினத்தில் மதுபானம் விற்ற 19 பேர் கைது
-
ஆடுகள் திருடிய 2 சிறுவர்கள் கைது
-
1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
-
பல்கலை., கூட்டமைப்பு 23வது நாளாக போராட்டம்
Advertisement
Advertisement