பந்தலுார் பகுதியில் நாட்டு மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு

பந்தலுார்:
பந்தலுார் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் ஊறுகாய் போட பயன்படும் வடு மாங்காய், கிளிமூக்கு, நாட்டு மாங்காய் ஆகிய வகைகள் விளைகின்றன.
அதில், வடு மாங்காய் தனியார் தோட்டங்களில் உயரமான மரங்களில் வளர்வதால், இதனை பறிக்க கேரளாவில் இருந்து அனுபவமிக்க நபர்கள் வருகின்றனர். வனப்பகுதியில் வடு மாங்காய் பழுத்தவுடன் பறவைகள் மற்றும் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உட்கொள்வதால், அதனை பறிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். மற்ற ரக மாங்காய் நடப்பு ஆண்டு அதிகளவில் காய்த்துள்ளது. இவைகள் பழுத்தால் பறவைகளுக்கு விருப்ப உணவாக அமைந்துள்ளது. மேலும், ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் பயன்படுத்தாத நிலையில், மக்கள் விரும்பி உட் கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஆஸ்திரேலிய பொதுத்தேர்தல்; பிரதமர் அல்பானீஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
-
ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: சைவ சித்தாந்த மாநாட்டில் ஜே.பி.நட்டா பேச்சு
-
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான் கண்டனம்
-
பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இறந்துவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
Advertisement
Advertisement