ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி

கான்பெரா: ஆஸ்திரேலியா பொதுத்தேர்தலில் பிரதமர் அல்பானீஸின் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
@1brஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அல்பானீஸின் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா பார்லிமென்டிற்கு இன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பிரதமர் அல்பானீஸ் கட்சி தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு வந்தது.
அதன்படியே, ஓட்டு எண்ணிக்கையில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் 151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா பார்லிமென்ட் தேர்தலில், 76 இடங்களைப் பிடித்தால் ஆட்சியை பிடித்து விடலாம். இப்படியிருக்கையில், அல்பானீஸின் கட்சி 78 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. எதிர்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டனுக்கு 30 இடங்களே கிடைத்துள்ளன.
தேர்தல் வெற்றி குறித்து அல்பானீஸ் கூறுகையில், "இது என்னுடைய வாழ்க்கையில் பெருமைமிக்க சிறந்த தருணம்," என்றார்.
அதேபோல, பிரிஸ்பேனில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் தேர்தல் தோல்வி குறித்து பேசிய டட்டன், "தேர்தல் முடிவை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். தொழிலாளர் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது. அதனை ஏற்கிறேன்," எனக் கூறினார்.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அதிகரிக்கும் பொருளாதார செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அல்பானீஸூக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஆனால், எதிர்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டனின் சில திட்டங்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தைப் போன்று இருந்ததால், அவருக்கான ஆதரவு குறைந்தது.
இதன்மூலம், அல்பானீஸ் மீண்டும் பிரதமராக உள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Senthoora - Sydney,இந்தியா
03 மே,2025 - 17:49 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement