சாலையோரத்தில் உள்ள பழைய வாகனங்களை அகற்ற வலியுறுத்தல்

குன்னுார்:
குன்னுார் பகுதிகளில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழையவாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஏராளமான பழைய வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற நகராட்சிகூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு தீர்வு காண, போலீசாரின் ஒத்துழைப்புடன், நடவடிக்கை எடுப்பதாக கமிஷனரும் உறுதியளித்து உள்ளார்.
எனினும், டி.டி.கே., சாலை, வண்ணாரப்பேட்டை சாலை, டென்ட் ஹில், கான்வென்ட் ரோடு உட்பட பல இடங்களிலும் வாகனங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளது. சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களில் சமூக விரோத செயல்களும் நடந்து வருவதால், இதற்கு தீர்வு காண வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 17 நாகை மீனவர்கள் காயம்
-
ஆஸி., பொதுத்தேர்தல்; மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆளும் தொழிலாளர் கட்சி
-
ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: சைவ சித்தாந்த மாநாட்டில் ஜே.பி.நட்டா பேச்சு
-
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான் கண்டனம்
-
பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இறந்துவிடும்; முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement