அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா
சேலம்,சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில், 22ம் ஆண்டாக, அறுபத்து மூவர் திருவிழா நேற்று முன்தினம், திருமுறை, திருப்புகழ் இன்னிசை கச்சேரியுடன் தொடங்கியது.
நேற்று காலை, கோவில் வளாகத்தில் உள்ள, 63 நாயன்மார் மூலவர் கற்
சிலைகள், 63 உற்சவர் பஞ்சலோக திருமேனிகளுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட, 16 வகை பொருட்களால் அபி
ேஷகம், அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது.
இதில் சேலம் ராம
கிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் இருந்து, கீதார்த்தானந்தா மஹராஜ் சுவாமிகள், 'அறுபத்து மூவர் பெருமை' தலைப்பில் பேசினார்.
மாலை, கோவில் தலைமை ஸ்தானீகர் தங்க பிரசன்னகுமார், சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலர் யதாத்மானந்த மஹராஜ் முன்னிலையில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா, கோவிலில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. விழா நிறைவாக, வரும், 14 இரவு, சுகவனேஸ்வரர் கோவிலில் தங்க ரதம் இழுக்கப்படும்.
சிங்க வாகனம்
சங்ககிரி சென்ன கேசவப்பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று இரவு, சிங்க வாகனத்தில் சென்ன கேசவ பெருமாள், சங்ககிரி நகரில் திருவீதி உலாவாக அழைத்து வரப்பட்டார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும்
-
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
-
கார் இல்லாத சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்; சொத்து பட்டியலில் சுவாரஸ்யம்!
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
-
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 15 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி