' நீட் ' தேர்வால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

திருவொற்றியூர்: நாடு முழுவதும் நீட் தேர்வு, நேற்று மதியம் துவங்கி மாலையில் முடிந்தது. இதில், மாணவ - மாணவியர்ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வெழுதினர்.

அதன்படி, திருவொற்றியூரில், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தமருகே உள்ள, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி சென்டரில், 720 மாணவ - மாணவியர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில், 20 பேர் வரவில்லை. மீதமுள்ள, 700 பேர் தேர்வெழுதினர்.அதேபோல, தாங்கல் பேருந்து நிறுத்தமருகே உள்ள, திருத்தங்கல் நாடார் பள்ளி சென்டரில், 480 மாணவ - மாணவியர்தேர்வெழுத வேண்டிய நிலையில், 13 பேர் வரவில்லை. மற்றவர்கள் தேர்வெழுதினர்.

அதன்படி, ஒரே நேரத்தில், கார், டூ - வீலர், ஆட்டோக்களில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ - மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோரால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement