பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு

மும்பை: சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவின் வடக்கு மும்பை பகுதியான கன்டிவலியில் உள்ள சார்கோப் காவல்நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, பிரபல நடிகர் அஜாஸ் கான் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, நடிகர் அஜாஸ் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே, நடிகர் அஜாஸ் கான் தொகுத்து வரும் ஹவுஸ் அரஸ்ட் நிகழ்ச்சி உல்லு ஆப்பில் வெளியாகி வருகிறது. இதில், ஆபாச காட்சிகள் இருப்பதாக பல தரப்பினர் புகார் அளித்திருந்தனர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பெண் ஒருவர் அஜாஸ் கான் மீது பாலியல் வழக்கு தொடர்ந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.







மேலும்
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்