கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஏராளமான அலுவலக பிரிவுகள் உள்ளன. நுாற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம், மேலும் பல்வேறு வேலை நிமித்தமாக, தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு இருந்தது.
அதில், தினமும் தண்ணீரை நிரப்பி வந்தனர்.தற்போது சின்டெக்ஸ் தொட்டி அகற்றப்பட்டு விட்டது. மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர். தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலை உள்ளது. கடைகளில் பணம் கொடுத்து, பாட்டில் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் வந்து செல்லும் மக்களுக்காக, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும்
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்
-
ரேஷனில் தரமில்லாத அரிசி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு