23 முதல் மணல் லாரிகள் ஓடாது உரிமையாளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில், 'ஆன்லைன்' முறையில் 'எம் - சாண்ட்', ஜல்லி விற்பனை மேற்கொள்ள வலியுறுத்தி, வரும் 23 முதல் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர்கள் செல்ல ராஜாமணி, எஸ்.யுவராஜ் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால், கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணல் கிடைப்பது முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
மணல் ஏற்றிச் செல்வதற்கு என வடிவமைக்கப்பட்ட, 55,000 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதை நம்பி இருக்கும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே, மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும்.
இந்த சூழலை பயன்படுத்தி, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், 'எம் - சாண்ட், பி - சாண்ட்', ஜல்லி விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றனர். அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, அதிக விலைக்கு வெளிமாநிலங்களுக்கு விற்று வருகின்றனர். நடைச்சீட்டு முறைகேடு, அதிக பாரம் ஏற்றுதல் போன்ற முறைகேடுகளால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, குவாரிகள், கிரஷர்களை அரசுடைமையாக்கி, ஜல்லி, எம் - சாண்ட் விற்பனையை, 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23 முதல் தமிழகம் முழுதும் லாரிகளை இயக்காமல் நிறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்
-
ரேஷனில் தரமில்லாத அரிசி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிராமண சமாஜம் ஆதரவு
-
இலங்கைக்கு தப்பிய அகதியால் கடல் பாதுகாப்பில் கேள்விக்குறி