புதிய பைக் மீது லாரி மோதல் மருமகன் - தாய்மாமன் பலி
ஹாவேரி: புதிய பைக் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதியதில் மருமகனும், தாய்மாமனும் உயிரிழந்தனர்.
ஹாவேரி மாவட்டம், ஹனகல்லின் வர்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் பாவடி, 25. சங்கரிகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேசப்பா தேவிஹொசூர், நாகராஜின் தாய்மாமா
நேற்று காலை நாகராஜ் பாவடியும், மல்லேசப்பாவும் நகரில் புதிய இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கவுரபூர் கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாய்மாமா - மருமகன் என்றாலும், இருவரும் நண்பர்கள் போன்று பழகி வந்தனர். ஒரே நாளில் இருவரும் இறந்தது, குடும்பத்தினர், உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாவேரி ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
Advertisement
Advertisement