'ஹிந்து அமைப்பினருக்கு பாதுகாப்பில்லை'

பெங்களூரு: ''தட்சிண கன்னடாவில் ஹிந்து பிரமுகர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மங்களூரில் சுஹாஸ் ஷெட்டி கொலை, மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது மற்றொரு ஆர்வலர் பரத் கும்டாவுக்கு, சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது. கேரளாவை சேர்ந்த முகமது அஷ்ரப்பின் கொலையில், பரத் கும்டாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட, இப்போது பாதுகாப்பு இல்லை. அரசும், இப்பாதையில் தொடர்ந்தால், பா.ஜ.,வின் போராட்டம் தீவிரமடையும். தட்சிண கன்னடாவில் ஹிந்து பிரமுகர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், தனக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் வந்துள்ளதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் சரண் பம்ப்வெல், மங்களூரு போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!