பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது. போருக்கு பதிலாக பொருளாதார அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
முன்னாள் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பார்வையாளர் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகரத் தலைவர் மணிராஜன் செய்தார். கலெக்டர் ஜெயசீலனிடம் மனு அளித்தனர்.
* சிவகாசியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாநகர தலைவர் போஸ் மணிகண்டன், கவுன்சிலர் குமரி பாஸ்கர், அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாலசுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய தலைவர் சிவசெல்வராஜ், ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ், பூபதி, சிந்து பாரதி கலந்து கொண்டனர். சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர்.
மேலும்
-
பூவந்தியில் கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ரிசர்வ் வங்கி மூலம் மீட்க முயற்சி
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: ஏற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள்
-
பெங்களூரு பட்டாளம்மன் திருவிழா
-
மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு