ஏர்வாடி சந்தனக்கூடு விழாவில் தர்காவில் மவுலீது ஓதுதல் ஏராளமானோர் பங்கேற்பு

கீழக்கரை: -ஏர்வாடி அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 23 நாட்களுக்கு மவுலீது என்னும் புகழ் மாலை ஓதப்படுகிறது.

இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து ஓதப்படும் மவுலீது நிகழ்ச்சிக்கு ஏராளமான யாத்திரீகர்கள், பொதுமக்கள் பிரார்த்தனைக்காக வருகின்றனர். ஷெரீப் மண்டபத்தில் பேரிச்சம்பழம், பிஸ்கட், லட்டு, சாக்லேட், கற்கண்டு உள்ளிட்டவைகளை தட்டுகளில் வரிசையாக வைத்து பிரார்த்தனை செய்யப்படுகிறது.

மகரீபு தொழுகைக்கு பிறகு மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை தொடர்ந்து ஓதப்படுகிறது. நிறைவு பெற்ற பின்பு யாத்திரீகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதமாக இனிப்பு பதார்த்தங்கள் வழங்கப்படுகின்றன. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்கின்றனர்.

Advertisement