புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி: பால்குடி கருப்பசுவாமி கோயிலில் சித்திரை மாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று கச்சிராயன்பட்டி குதிரை பொட்டலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் புரவி மற்றும் சுவாமி சிலைகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று (மே 6) கோயிலில் உள்ள புரவிகளை குதிரை பொட்டலுக்கு கொண்டு செல்வதோடு திருவிழா நிறைவு பெறும். இவ்விழாவில் பால்குடி, கச்சிராயன்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Advertisement