திருப்பரங்குன்றத்தில் மே 14 முதல் ஜமாபந்தி

மதுரை: திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள 27 கிராமங்களில் ஜமாபந்தி மே 14 முதல் 16 வரை நடக்கிறது. பொதுமக்கள் மேற்கண்ட நாட்களில் நிலம் மற்றும் வருவாய்த் துறை தொடர்பான மனு அளித்து தீர்வு காணலாம்.

மே 14ல் திருப்பரங்குன்றம், நிலையூர் 2வது பிட், வாலானேந்தல், புதுக்குளம் 3வது பிட், சூரக்குளம், தோப்பூர், ஆஸ்டின்பட்டி.

மே 15ல் தனக்கன்குளம், தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, மேலநெடுங்குளம், நிலையூர் 1வது பிட், வேடர்புளியங்குளம், மாடக்குளம், புதுக்குளம் 2வது பிட்.

மே 16 ல் எலியார்பத்தி, பாரப்பத்தி, பெரியகூடக்கோவில், கொம்பாடி, நெடுமதுரை, ஒத்தை ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், தொட்டியபட்டி, வலையபட்டி, முல்லாகுளம், பெருங்குடி, வலையங்குளம்.

Advertisement