102 நிமிடம் சிலம்பம் சுற்றிய அரசுப்பள்ளி மாணவர்கள்

பல்லடம்; கேத்தனுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 102 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
பல்லடம் அடுத்த கேத்தனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'நோபல்' உலக சாதனைக்கான நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்ற ஆரம்பித்தனர். தொடர்ந்து, 102 நிமிடங்கள் சிலம்பம் சுற்றினர்.
முன்னதாக, உழவன் வடிவில் வரையப்பட்ட ஓவியத்தின் மீது, மாணவ, மாணவியர் அனைவரும் நின்றபடி, சிலம்பம் சுற்றினர். இந்த நிகழ்வு முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு, உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பங்கேற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்
Advertisement
Advertisement