புகார் பெட்டி ,.

குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?



வடக்கனந்தல், காய்கறி மார்க்கெட் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், வடக்கனந்தல்.

'குடி' மகன்களால் தொல்லை



அம்மாப்பேட்டை, சாலையோரத்தில் மது அருந்துவதை தடுக்க போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-ராஜா, அம்மாப்பேட்டை.

உலர்களமான தேசிய நெடுஞ்சாலை



பிரதிவிமங்கலம் பைபாஸ் சாலை சந்திப்பு, தேசிய நெடுஞ்சாலையை எள் உள்ளிட்ட பயிர்களை உலர்த்தும் களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

-அறிவழகன், தியாகதுருகம்.

மின் விளக்கு எரியாததால் அச்சம்



கள்ளக்குறிச்சி, சாமியார் மடத்திலிருந்து பெருவங்கூர் வரை செல்லும் சாலையோர மின் விளக்குகள் எரியாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

-பிரசாந்த், பெருவங்கூர்.

Advertisement