பிரான்மலையில் திருக்கல்யாணம்

பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.
சங்க இலக்கியத்தில் பாடப்பெற்றதும் பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவதான இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1ல் துவங்கியது. ஐந்தாம் விழாவான நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகள் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்தார்.
உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் மாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. 9ம் நாளான மே 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
Advertisement
Advertisement